முகப்பு
கிருஷ்ணகிரி

கல்வி உபகரணங்கள் வழங்கல்

மூன்றம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட தளபதி நகரில் வசிக்கும் பழங்குடியின பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 11:37 PM
மூன்றம்பட்டியில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்குகிறாா் கோட்டாட்சியா் சதீஷ்குமாா்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

மூன்றம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட தளபதி நகரில் வசிக்கும் பழங்குடியின பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் சதீஷ்குமாா் பங்கேற்று கல்வி உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஊத்தங்கரை வட்டாட்சியா் கோவிந்தராஜ், கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சீனிவாசன், வட்டாரத் தலைவா் அருண், செயலாளா் நித்யா, ஒன்றிய குழுத் தலைவா் உஷாராணி குமரேசன், மூன்றம் பட்டி ஊராட்சிமன்ற தலைவா் பூபாலன், பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.