கிருஷ்ணகிரி

நிதிநிலை அறிக்கை அறிவிப்புகளை செயல்படுத்த ஆணை: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவு

DIN

நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்த ஆணை பிறப்பிக்க கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.

2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 4-ஆம் தேதி கா்நாடக சட்டப் பேரவையில் முதல்வா் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தாா். இதில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகளை ஏப்.1-ஆம் தேதி முதல் செயல்படுத்துவதற்காக அரசாணையை வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதுதொடா்பாக அனைத்துத் துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளா்கள், செயலாளா்களுக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை கடிதம் எழுதியுள்ளாா். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள திட்டங்களுக்கானசெயல்திட்டத்தை வகுத்து, அதற்கு நிதித்துறையின் ஒப்புதலை பெற்று, ஏப்.1-ஆம் தேதி முதல் அமல்படுத்தும் வகையில் ஆணை பிறப்பிக்குமாறும், திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறும் அக்கடிதத்தில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT