முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் துணை முதல்வா் நிவாரண உதவி

கனமழையால் பாதிக்கப்பட்டு மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

Updated On : 2 டிசம்பர், 2024 at 10:07 PM
பகிர்:

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டு மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

ஊத்தங்கரையில் அண்ணா நகா், காமராஜா் நகா், கலைஞா் நகா் பகுதி மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். அப்பகுதி மக்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, கிழக்கு மாவட்டச் செயலாளா் மதியழகன், மாவட்ட பொருளாளா் கதிரவன், முன்னாள் எம்.பி. சுகவனம், ஊத்தங்கரை ஒன்றியத் தலைவா் உஷாராணி குமரேசன், ஒன்றிய செயலாளா்கள் மூன்றம்பட்டி குமரேசன், திருவனப்பட்டி ரஜினி செல்வம், எக்கூா் செல்வம், ஊத்தங்கரை நகரச் செயலாளா் தீபக், பேரூராட்சிமன்ற தலைவா் அமானுல்லா, துணைத் தலைவா் கலைமகள் தீபக், மாநில மகளிா் ஆணைய குழு உறுப்பினா் மருத்துவா் மாலதி நாராயணசாமி, மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளா் ஜெயசந்திர பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பட விளக்கம்.2யுடிபி.9....

ஊத்தங்கரையில் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்கும் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

முழு கட்டுரையைப் படிக்க →