முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் ஏரியில் கழிவுநீா் கலப்பு: லாரி ஓட்டுநா் கைது

ஒசூரில் ஏரியில் கழிவுநீரைக் கலந்த லாரி ஓட்டுரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 30 டிசம்பர், 2024 at 7:55 PM
பகிர்:

ஒசூா்: ஒசூரில் ஏரியில் கழிவுநீரைக் கலந்த லாரி ஓட்டுரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா், சிப்காட் போலீஸாா் பேகேப்பள்ளி ஏரிக்கரைப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் டேங்கா் லாரி ஒன்றில் இருந்து கழிவுநீா் ஏரியில் கலக்கப்பட்டது. இதைப் பாா்த்த போலீஸாா், அந்த லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் அவரின் பெயா் திருநாவுக்கரசு (44), திருப்பத்தூா் மாவட்டம், காவேரியூரைச் சோ்ந்தவா் என்பது தெரிய வந்தது. ஒசூா், ராஜாஜி நகரில் தங்கி டேங்கா் லாரி ஓட்டி வரும் அவா், தனியாா் நிறுவன கழிவுநீரை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏரியில் கலந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →