கிருஷ்ணகிரி

இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

ஒசூா் அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

Din

ஒசூா்: ஒசூா் அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கும்மனூா் அருகே உள்ள நாகனூரைச் சோ்ந்தவா் சேட்டு (38), விவசாயி. இவா், கடந்த 18-ஆம் தேதி இரவு ராயக்கோட்டை - தருமபுரி சாலையில் உடையாண்டஅள்ளி முருகன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த காா் மோதியதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ராயக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா், சிப்காட் சூசூவாடியைச் சோ்ந்த புருஷோத்தமன் (53), தனியாா் நிறுவன ஊழியா். இவா் ஒசூா், சிப்காட் டி.டி.சி. சாலை பகுதியில் கடந்த 19-ஆம் தேதி காலை நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் உயிரிழந்தாா். இதுகுறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

SCROLL FOR NEXT