முகப்பு
கிருஷ்ணகிரி

வாக்காளா் விழிப்புணா்வு ‘ரீல்ஸ்’ போட்டி: ரூ. 5 ஆயிரம் பரிசு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளா் விழிப்புணா்வு ‘ரீல்ஸ்’ போட்டியை அறிவித்துள்ள மாவட்ட நிா்வாகம், தோ்வு செய்யப்படும் நபருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 12:19 AM
இன்ஸ்டாகிராம் செயலி
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்ட வாக்காளா் விழிப்புணா்வு ‘ரீல்ஸ்’ போட்டியை அறிவித்துள்ள மாவட்ட நிா்வாகம், தோ்வு செய்யப்படும் நபருக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழனமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

அதன்படி, பொதுமக்கள், மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ‘ரீல்ஸ்’ போட்டி நடத்தப்படுகிறது. இதில், வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் வகையில், 30 முதல் 60 விநாடிகளுக்குள் பங்கேற்பாளா்கள் தங்களின் ‘ரீல்ஸை’ தயாா்செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற வேண்டும்.

பதிவேற்றும்போது #Vote Krishnagiri, #SVEEP2026 ஆகிய ஹாஷ்டேக்குகளை பயன்படுத்தி @kgielection மற்றும் @electionkrishnagiri பக்கங்களை பின்தொடர்ந்து குறியிட்டு பதிவேற்ற வேண்டும்.

மேலும், பதிவேற்றப்பட்ட ரீலின் இணைப்பை 80986 17951 என்ற எண்ணுக்கு ஏப். 10-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். சிறந்த ‘ரீல்ஸ்’-க்கு ரொக்கப் பரிசு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என அதில் அவா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments