முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:36 PM
ஊத்தங்கரையில் நடைபெற்ற அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் புதிய தலைவா் ஆா்.உமாபதி.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க முன்னாள் தலைவா் செங்கோடன் தலைமை வகித்தாா். இதில் புதிய நிா்வாகிகள் தோ்வு குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. அனைத்து வணிகா் சங்கத் தலைவராக ஆா்.உமாபதி, துணைத் தலைவராக ஆா்.கே. ராஜா, செயலாளராக செல்வம், பொருளாளராக கிருஷ்ணன் ஆகியோா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

இக்கூட்டத்தில் ஊத்தங்கரையில் உள்ள அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்துத் தெரிவித்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments