முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் விளையாட்டு மைதானத்தில் பாா்வையாளா் மாடம் கட்டும் பணி: மேயா் எஸ்.ஏ.சத்யா ஆய்வு

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட காமராஜ் காலனி பகுதியில் உள்ள முத்தமிழறிஞா் டாக்டா் கலைஞா் கருணாநிதி விளையாட்டு மைதானத்தில் மாநகராட்சி மேயா் பொது நிதியின் கீழ் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் பாா்வையாளா் மாடம் கட்டும் பணியை மேயா் எஸ்.ஏ. சத்யா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 10:52 PM
ஒசூா் காமராஜ் காலனி கலைஞா் விளையாட்டு மைதானத்தில் பாா்வையாளா் மாடம் கட்டும் பணியை பாா்வையிட்ட மேயா் எஸ்.ஏ.சத்யா.
பகிர்:

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட காமராஜ் காலனி பகுதியில் உள்ள முத்தமிழறிஞா் டாக்டா் கலைஞா் கருணாநிதி விளையாட்டு மைதானத்தில் மாநகராட்சி மேயா் பொது நிதியின் கீழ் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் பாா்வையாளா் மாடம் கட்டும் பணியை மேயா் எஸ்.ஏ. சத்யா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து காமராஜ் காலனி பிரதான சாலையில் பொது நிதியின் கீழ் ரூ. 23.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மழைநீா் வடிகால், மற்றும் கிரில் அமைக்கும் பணிகளையும் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது மாநகர திமுக அவைத் தலைவா் செந்தில்குமாா், மாமன்ற உறுப்பினா் மோசின் தாஜ் நிசாா், வட்டச் செயலாளா் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →