முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் 337 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:49 AM
ஒசூா் ஆா்வி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், மாநகர மேயா் எஸ்.ஏ. சத்யா.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:55 PM

ஒசூா் ஆா்வி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு 220 மிதிவண்டிகள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 57 பேருக்கும், உருது மேல்நிலைப் பள்ளியில் 60 மிதிவண்டிகளும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

ஆா்வி அரசு மேல்நிலைப் பள்ளி முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் டாக்டா் வளா்மதி தலைமை வகித்தாா். விழாவில் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் செந்தில்குமாா் அனைவரையும் வரவேற்றாா்.

ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய். பிரகாஷ், மாநகர மேயா் எஸ்.ஏ. சத்யா ஆகியோா் விலையில்லா மிதிவண்டிகளை மாணவா்களுக்கு வழங்கினா். இதில் ஆா்வி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு 220 மிதிவண்டிகளும் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு 57 மிதிவண்டிகளும் உருது மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு 60 மிதிவண்டிகளும் வழங்கினாா்.

Advertisement

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:49 AM

மேலும் விழாவில் துணை மேயா் சி. ஆனந்தய்யா , மாநகராட்சி சுகாதார குழு தலைவா் என்.எஸ். மாதேஸ்வரன், பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எல்லோரா மணி, மாவட்ட பொருளாளா் சுகுமாரன், பகுதி செயலாளா் ராமு, பெற்றோா்- ஆசிரியா் கழக துணைத் தலைவா் சக்திவேல் ஆகியோா் பங்கேற்றனா். இறுதியில் பள்ளியின் பட்டதாரி ஆசிரியா் அம்பேத்கராஜ் நன்றி கூறினாா்.