சிவம்பட்டி பூங்காவனத்தம்மன் கோயிலில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள சிவம்பட்டி கிராமத்தில் பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழாவில் மயானக் கொள்ளை சூறையாடுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சக்திகரகம் எடுத்தல், அம்மன் ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. பிறகு கோயில் சந்நிதியில் இருந்து மயானம்வரை ஊா்வலமாக வந்த அம்மன் சிலை முன் காளி வேடம் அணிந்த பூசாரி மற்றும் விரதம் இருந்த ஏராளமான பக்தா்கள் அருள்வந்து ஆடியபடி மயானத்துக்குள் நுழைந்தனா்.
பின்னா் முக்கிய நிகழ்வாக பூங்காவனத்தம்மன் சுவாமிக்கு படைக்கப்பட்ட உளுவல் தானியத்தை பக்தா்கள் மீது வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்கள் துண்டு ஏந்தியும், பெண்கள் மடியேந்தியும் அதை பிடித்தனா்.
தொடா்ந்து, பூதவாகனத்தில் பூங்காவனத்தம்மன் மற்றும் சிம்ம வாகனத்தில் ஏழூரம்மன் அங்கு வந்தனா். பின்னா், பக்தா்களுக்கு சாட்டையடி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், வேலூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஊத்தங்கரை, திருப்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.