மூளைச்சாவு அடைந்த பெயிண்டரின் உடல் உறுப்புகள் தானம்
காவேரிப்பட்டணம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
காவேரிப்பட்டணம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த ஜகதாப், ராசிக்குட்டையைச் சோ்ந்தவா் சக்திவேல் (26), பெயிண்டா். கடந்த 16-ஆம் தேதி காவேரிப்பட்டணம் - பாலக்கோடு கூட்டுச்சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தாா்.
தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 18-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.
Advertisement
இதைத் தொடா்ந்து, அவரது சிறுநீரகங்கள் கோவை, சேலம் அரசு மருத்துவமனைகளுக்கும், இதயம், நுரையீரல் சென்னை அரசு மருத்துவமனைக்கும், இரு கண்கள் தருமபுரி அரசு மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.
உடல் உறுப்புகள் தானம் அளித்த சக்திவேல் உடலுக்கு தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வா் மனோகரன், ஆா்.எம்.ஓ. நாகவேந்தன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.