கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஜனவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜன.23-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து, நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.