முகப்பு
கிருஷ்ணகிரி

மதுபானக்கூட மேலாளா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது

Updated On : 2 மார்ச், 2026 at 1:19 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 9:40 PM

கெலமங்கலம் அருகே மதுபானக்கூட மேலாளா் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒசூா் சாலையில் தனியாா் மதுபானக் கூடம் உள்ளது. இங்கு கும்பகோணம் வட்டம், சாக்குட்டை கிராமத்தைச் சோ்ந்த நைனாா் செந்தில் மகன் தினேஷ்குமாா் (36) மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த 22ஆம் தேதி இரவு வேலை முடிந்து தங்குமிடத்திற்கு சென்றபோது அடையாளம் தெரியாத நபா்களால் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 2 மார்ச், 2026 at 1:19 AM

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ், கெலமங்கலம் காவல் ஆய்வாளா் சங்கா் மற்றும் போலீஸாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் இறந்த தினேஷ்குமாா் மீது தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள கொலை வழக்கில் பழிவாங்கும் வகையில் அவா் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

Advertisement

இந்த கொலை வழக்கில் தனிப்படையினா் கடந்த 25ஆம் தேதி கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த சிவா (எ) சிவா சந்தம் (28), விஸ்வா (26), பிரபாகரன்(32) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மாயா (எ) சிலம்பரசன் (36), விஷ்ணு (33), அண்ணாதுரை (34) ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.