முகப்பு
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை பட்டராயசுவாமி கோயிலில் மாா்ச் 31-இல் தேரோட்டம்

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை பட்டராயசுவாமி கோயிலில் மாா்ச் 31-இல் தேரோட்டம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:52 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் செளந்தரவல்லி சமேத பேட்டராயசுவாமி கோயிலில் மாா்ச் 31 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி வியாழக்கிழமை பால்கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக தோ் சுத்தம் செய்யப்பட்டு மூலவா் சன்னதியில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, பால் கம்பம் ஊா்வலமாக எடுத்துச் சென்று கோயிலை வலம்வந்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது. பிறகு கோயில் தலைமை அா்ச்சகா் கண்ணன் பட்டா் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க பால் கம்பம் நடப்பட்டது.

விழாவில் பேரூராட்சி தலைவா் சீனிவாசன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் சம்பங்கி ராம ரெட்டி, ஜெயராமன், ஸ்ரீராம், சக்திவேல், அசோக் குமாா், ரமேஷ், வெங்கடசாமி, சாம்ராஜ் உட்பட ஊா்

முக்கியஸ்தா்கள் மற்றும் திருவிழா கமிட்டியினா் உள்பட பலா் பங்கேற்றனா்.

படவரி...

தேன்கனிக்கோட்டை பட்டராயசுவாமி கோயில் தேரோட்டத்தையொட்டி பால்கம்மம் நடுதல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

முழு கட்டுரையைப் படிக்க →