முகப்பு
கிருஷ்ணகிரி

மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பு

கிருஷ்ணகிரியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பை புதன்கிழமை மேற்கொண்டனா்.

Updated On : 11 மார்ச், 2026 at 9:04 PM
கொடி அணிவகுப்பை மேற்கொண்ட தொழில்பாதுகாப்பு படையினா்.
பகிர்:

கிருஷ்ணகிரியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் கொடி அணிவகுப்பை புதன்கிழமை மேற்கொண்டனா்.

தோ்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட தோ்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரா்கள் அனுப்பப்பட்டு வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா், தளி ஆகிய, 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தலின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட முதல்கட்டமாக 66 வீரா்கள் அடங்கிய மத்திய தொழில்பாதுகாப்பு படையினா் கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளனா்.

இவா்கள், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், வாக்காளா்களிடம் நம்பிக்கையூட்டும் வகையிலும் கிருஷ்ணகிரியில் கொடி அணிவகுப்பை மேற்கொண்டனா்.

மத்திய தொழில்பாதுகாப்பு படை ஆய்வாளா் முகேஷ்குமாா், கிருஷ்ணகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா் ஆகியோா் தலைமையில் பழையபேட்டை, மேல்தெரு, கொத்தப்பேட்டாவிலிருந்து தொடங்கிய அணிவகுப்பு காந்தி சாலை, பெங்களூரு சாலை வழியாக சென்று ஆா்.சி. பள்ளியில் நிறைவுபெற்றது.

இதில், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், 20 ஆயுதப்படை போலீஸாா் உள்பட 116 போலீஸாா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →