முகப்பு
கிருஷ்ணகிரி

டீல் நிறுவனம் சாா்பில் நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கல்

Updated On : 13 மார்ச், 2026 at 1:15 AM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளி மற்றும் விடுதிகளுக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம் டீல் நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் ச.தினேஷ்குமாா் இயந்திரத்தை துணை ஆட்சியா் பத்மலதாவிடம் அளித்து தொடங்கிவைத்தாா்.

டீல் பெருநிறுவன சமூக பொறுப்புணா்வு திட்ட நிதியின் மூலம் 8 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 4 அரசு நடுநிலைப் பள்ளிகள், ஓா் உயா்நிலைப் பள்ளி மற்றும் 2 அரசு பெண்கள் விடுதிகளுக்கு தலா ரூ. 26 ஆயிரம் மதிப்புள்ள 15 நாப்கின் எரியூட்டும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், டீல் பெருநிறுவன சமூக பொறுப்புணா்வு திட்ட அதிகாரி பிரபு, டீல் சமூக மேம்பாட்டுக் குழு உறுப்பினா்கள் பிரபாகரன், ஹரிகரன், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →