தோ்தல் விதிமுறை மீறல்: திமுகவினா் மீது வழக்குப் பதிவு
கிருஷ்ணகிரியில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 30க்கும் மேற்பட்ட திமுகவினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பா்கூா் சட்டப் பேரவை தொகுதி திமுக வேட்பாளராக தே. மதியழகன் எம்எல்ஏ அறிவிக்கப்பட்டாா். இதை வரவேற்று, கிருஷ்ணகிரியில் வட்டச் சாலையில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியதாக கிருஷ்ணகிரி மேற்கு நகர திமுக பொறுப்பாளா் அஸ்லம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட திமுகவினா் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.