கிருஷ்ணகிரியில் ரூ.3.52 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
கிருஷ்ணகிரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், ரூ. 3.52 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், ரூ. 3.52 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இ-நாம் முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், 9 விவசாயிகள், 42 மூட்டை மஞ்சளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா்.
இதில், ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் அதிகபட்சமாக ரூ. 13,339-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 12,899-க்கும், உருண்டை மஞ்சள் அதிகபட்சமாக ரூ.12,473-க்கும், குறைந்தபட்சமாக ரூ.11,899-க்கும், பனங்காலி ரூ. 26,009-க்கும் ஏலம் போனது. மொத்தம், 2,662 கிலோ மஞ்சள், ரூ. 3.52 லட்சத்துக்கு ஏலம் போனது. ஏலம் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதுகுறித்து, கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் பழனியம்மாள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இ--நாம் முறையில் நடந்த ஏலத்தில், மஞ்சளின் தரத்திற்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விவசாயிகள், தங்கள் விளைபொருளை கிடங்கில் இருப்பு வைத்து, சந்தை மதிப்பில், 50 முதல் 75 சதவீதம் வரை ஆண்டுக்கு 5 சதவீதம் வட்டியில் பொருளீட்டு கடன் பெறலாம். உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்யும் வசதியும் உள்ளது. மேலும், விவரங்களுக்கு 99522 67990 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா்.