முகப்பு
கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே 6 சவரன் தங்கநகை, ரூ. 20 ஆயிரம் திருட்டு

சூளகிரி அருகே வீட்டின் கதவை திறந்து 6 சவரன் தங்க நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 22 மே 2026, 6:43 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

சூளகிரி அருகே வீட்டின் கதவை திறந்து 6 சவரன் தங்க நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள அட்டகுறிக்கி கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (43), இவா் மற்றும் இவரது மனைவி இருவரும் வேலைக்கு சென்றனா்.

வியாழக்கிழமை மதியம் ரவி வீட்டுக்கு வந்தபோது, கதவு திறக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பிரோக்கள் திறக்கப்பட்டு கம்மல், மோதிரம், தங்கச் சங்கிலி என 6 சவரன் தங்க நகைகளும், ரூ. 20 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது. புகாரின்பேரில், சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement