பாவை வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் ஜூடோ போட்டியில் தங்கம் வென்றனர்.
மத்திய இடைநிலைக் கல்வி ஆணையம் (சிபிஎஸ்இ) சார்பில், தென் மண்டல அளவிலான பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், பெங்களூரில் உள்ள சர்வதேச பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.
இப்போட்டியில், ஜூடோ பிரிவில் 19 வயதுக்குள்பட்ட 80 கிலோவுக்கு குறைவான எடை கொண்ட போட்டிகளும், 80 கிலோவுக்கு அதிகமான எடைகொண்ட போட்டிகளும் நடைபெற்றன.
இதில், பாவை வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களான ஆர்.பி.ரிதுன்ராஜ் 80 கிலோவுக்கு அதிகமான எடை பிரிவில் முதல் இடம் பெற்று தங்கப் பதக்கத்தையும், இ.எஸ்.மனோஜ்குமார் 80 கிலோவுக்கு குறைவான எடை பிரிவில் மூன்றாவது இடம் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
பதக்கம் வென்ற மாணவர்களையும், அதற்கு சிறப்பாக பயிற்சி அளித்த உடல்கல்வி ஆசிரியர்களையும், பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கைநடராஜன், பள்ளிகளின் இயக்குநர் முனைவர் சி.சதீஷ், சேர்க்கை இயக்குநர் கே.செந்தில், முதல்வர் ஜமுனாரமணி உள்ளிட்ட இயக்குநர்கள் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.