நாமக்கல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்: ரூ. 25 ஆயிரம் அபராதம்

DIN

பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டியில் மணல் கடத்திய லாரியை பரமத்தி வேலூர் வட்டாட்சியர் பறிமுதல் செய்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.
பாலப்பட்டியில் மணல் கடத்திச் செல்வதாக பரமத்திவேலூர் வட்டாட்சியருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாலப்பட்டி அருகே திங்கள்கிழமை இரவு பரமத்தி வேலூர் வட்டாட்சியர் ருக்குமணி,  வருவாய்த் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியைத் தடுத்து நிறுத்து சோதனையிட்டதில் மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் மணலை பாலப்பட்டியிலிருந்து சேலத்துக்குக் கடத்துவதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் லாரியை பறிமுதல்
செய்து ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் மணல் லாரியை ஓட்டி வந்த சேலம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் நிவேஷ்குமார் (25), லாரி உரிமையாளர் அருள்மணி ஆகியோரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT