நாமக்கல்

அரசுப் பள்ளிக்கு தொலைக்காட்சிப் பெட்டி அளிப்புகு

DIN


குமாரபாளையத்தை அடுத்த அருவங்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
குமாரபாளையம் உயர்தொழில்நுட்ப நெசவுப் பூங்கா சார்பில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.சேகர், இயக்குநர்கள் ஓ.ஆர்.செல்வராஜன், ஜீவானந்தம் உள்ளிட்டோர் இதனை வழங்க, பள்ளிபாளையம் வட்டாரக் கல்வி அலுவலர் கே.மேகலாதேவி பெற்றுக் கொண்டார்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.முருகேசன், மேலாண்மைக் குழுத் தலைவர் பிரபாவதி கண்ணன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவ, மாணவியரின் தேவைக்காக ரூ. 37 ஆயிரம் மதிப்பிலான தொலைக்காட்சிப் பெட்டியை வழங்கியமைக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பி.கண்ணன் மற்றும் மாணவ, மாணவியர் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளி வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள்குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT