நாமக்கல்

முட்டை விலை 3 காசுகள் உயர்ந்து ரூ.3.59-ஆக நிர்ணயம் 

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 3 காசுகள் உயர்ந்து ரூ. 3.59-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DIN

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 3 காசுகள் உயர்ந்து ரூ. 3.59-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில், அதன் தலைவர் மருத்துவர் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஐதராபாத், விஜயவாடா உள்ளிட்ட மண்டலங்களில் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி, விலையை உயர்த்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது.
 அதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமைக்கான முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 3 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ. 3.59-ஆக அறிவிக்கப்பட்டது. சென்னை மண்டலத்தில் 15 காசுகள் உயர்ந்து ஒரு முட்டை ரூ. 3.60-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்காழி கிலோ ரூ. 63-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT