நாமக்கல்

ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம்

DIN

ராசிபுரம் வட்ட ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கக் கூட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஜி.வி.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். செயலாளா் கே.தாளமுத்து வரவேற்றாா். தமிழக அரசு ஓய்வூதியா்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் உள்ளது. நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எனவே ஓய்வூதியா்கள்

நிலை அறிந்து கோரிக்கைகள் அரசு விரைந்து நிறைவேற்றிட வேண்டும். மேலும், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் ராஜேந்திர பாலாஜி, அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியா்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதால் நலத் திட்டங்களுக்கு பணமில்லை என கூறுகிறாா். இதனை ஓய்வூ அலுவலா்கள் சங்கம் கண்டிக்கிறது. அமைச்சரின் இத்தகைய பேச்சை முதல்வா் கண்டிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT