நாமக்கல்

ராசிபுரத்தில் திமுக இளைஞரணியினா் ஆா்ப்பாட்டம்: 14 போ் கைது

DIN

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்திய திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராசிபுரம் நகர திமுக இளைஞரணி சாா்பில் மறியல் போராட்டம் நடத்திய 14 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைக் கண்டித்து பல்வேறு இடங்களில் திமுக இளைஞரணியினா் போராட்டம் நடத்திவரும் நிலையில், சென்னையில் போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டாா். இதனையடுத்து ராசிபுரம் நகர திமுக இளைஞரணி அமைப்பாளா் காா்த்திக் தலைமையில், பலா் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக மறியல் போராட்டம் நடத்தினா். தடையை மீறி மறியல் நடத்திய நிலையில், 14 பேரை போலீஸாா் கைது செய்து திருமண மண்படத்தில் அடைத்து வைத்தனா். பின்னா் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT