நாமக்கல்

நாமக்கல் அருகே காரில் கடத்தப்பட்ட 60 கிலோ கஞ்சா பறிமுதல்: தருமபுரி இளைஞர் கைது

DIN

நாமக்கல் வழியாக காரில் கடத்தப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள 60 கிலோ எடையுள்ள கஞ்சாவை  போலீஸார்  பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தருமபுரியைச்  சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.  மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர். 
நாமக்கல் கோட்டை சாலையில் போக்குவரத்து போலீஸார் வாகன நெரிசலை ஒழுங்குப்படுத்தும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, சேந்தமங்கலம் வழியாக வந்த கார்,  விதிகளை மீறி கோட்டை சாலையில் செல்ல முயன்றது.  இதனால், போலீஸார் காரைத் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர்.  அப்போது, காரில் வந்த இருவரும் தப்பியோட முயன்றனர்.
இருவரையும் துரத்திய போலீஸார்,  ஒருவரைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.  விசாரணையில், தருமபுரியைச் சேர்ந்த பிரபாகரன் (31) என்பதும்,  தப்பிச் சென்றவர் நாமக்கல் மாவட்டம்,  பரமத்தி வேலூரை அடுத்த மணியனூரைச் சேர்ந்த சீனிவாசன் (35) என்பதும் தெரியவந்தது.  இவர்கள் இருவரும் ஆந்திரத்திலிருந்து 60 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வாங்கி வந்தது தெரியவந்தது.  
இதையடுத்து,  காரைச் சோதனையிட்ட போலீஸார், ரூ. 6 லட்சம் மதிப்பிலான 60 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றியதோடு,  காரையும் பறிமுதல் செய்தனர்.  இதையடுத்து பிரபாகரனைக்  கைது செய்த போலீஸார்,  தலைமறைவான சீனிவாசனைத் தேடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT