நாமக்கல்

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

DIN

பரமத்தி வேலூர் காவிரிப் பாலம் அருகே  இரு சக்கர வாகனம் நிலை தடுமாறியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம்,  வேலாயுதம்பாளையம், காந்திநகரைச் சேர்ந்த அருணாசலம் மகன் சிவசக்தி (24). இவர் கடந்த 27 - ஆம் தேதி வேலூருக்கு வந்து விட்டு பின்னர் தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் திருப்பிச் சென்றுள்ளார். அப்போது,  வேலூர் காவிரிப் பாலம் அருகே இருசக்கர வாகனம்  நிலை தடுமாறியதில் அவர் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி சிவசக்தி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT