நாமக்கல்

உரிமம் இன்றி பட்டாசு விற்றவர் கைது

DIN


பரமத்திவேலூர், ஜூன்13: பரமத்தி வேலூரில் உரிமம் இன்றி பட்டாசு  விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து  ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
பரமத்தி வேலூர் சந்தைப்பேட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக  பரமத்தி வேலூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத் தகவலின் அடிப்படையில் பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீஸார், சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.  மேலும் உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்ததாக ரமேஷ் (54) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT