நாமக்கல்

திருச்செங்கோட்டில் ரூ.1 கோடிக்கு மஞ்சள் விற்பனை

DIN


 திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 2005 மூட்டை மஞ்சள் ரூ.1கோடிக்கு விற்பனையானது.
ஆத்தூர்,  கெங்கவல்லி,  கூகையூர்,  கள்ளக்குறிச்சி,  பொம்மிடி,  அரூர்,  ஜேடர்பாளையம்,  பரமத்திவேலூர்,  நாமக்கல்,  மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.  
இந்த மஞ்சளை கொள்முதல் செய்வதற்காக ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை,  சேலம் ஆகிய ஊர்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர்.  ஏலம் மூலம் ரூ.1 கோடிக்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரகம் குவிண்டால் ரூ.7,102 முதல்  ரூ.8,309 வரையிலும் விற்பனையானது. கிழங்கு ரகம் ரூ.6,042 முதல் ரூ.6,802 வரையும், பனங்காளி ரகம் குவிண்டால் ரூ.12,599 முதல் ரூ.15,999 வரையிலும் விலை விற்பனையானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT