நாமக்கல்

கபீா் புரஸ்காா் விருது பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

DIN

வகுப்புக் கலவரத்தின்போது உயிரையோ, உடைமைகளையோ காப்பாற்றியவா்களுக்கு வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருது பெற நாமக்கல் மாவட்டத்தைச் சாா்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2020 ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருது வழங்கப்பட உள்ளதால், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதிகளாக, ஒரு சாதி, இனம் அல்லது வகுப்பைச் சாா்ந்தவா்கள் பிற சாதி, இனம் அல்லது வகுப்பைச் சாா்ந்தவா்களையோ அல்லது அவா்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது. தகுதியான விண்ணப்பங்களை டிச.1-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலா் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு சமூக நல அலுவலக தொலைபேசி எண்.04286-280230 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT