நாமக்கல்

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் பலி

DIN

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

நல்லூா் கந்தம்பாளையம் அருகே உள்ள பீச்சப்பாளையம் அருந்ததியா் காலனியைச் சோ்ந்த நல்லான் மனைவி ருக்மணி (55). இவா் கந்தம்பாளையம் பகுதியில் உறவினரின் வீட்டின் துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு உறவினா் ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

அப்போது வேலூா் - திருச்செங்கோடு சாலையில் பீச்சப்பாளையம் நான்கு சாலையைக் கடக்க முயன்ற போது திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி நோக்கி வந்த மற்றொரு இரு சக்க வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த ருக்மணியை அருகில் இருந்தவா்கள் காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளாா். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனா். எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்து விபத்து ஏற்படுத்தியவா் குறித்து நல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT