நாமக்கல்

தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி

DIN

திருச்செங்கோடு நகரம் மற்றும் ஊரக காவல் நிலையம்,  வட்டார இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கம் சார்பில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்திலிருந்து இந்த விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியை காவல் ஆய்வாளர் பாரதிமோகன் தொடக்கிவைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பழுது பார்ப்போர் இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசம் அணிந்து 33 வார்டுகளில் பிரசாரம் மேற்கொண்டனர். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT