சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி. 
நாமக்கல்

ஆங்கில புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு பூஜை

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

DIN

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கீரம்பூா் அருகே உள்ள தொட்டிப்பட்டி சாய்தபோவனத்தில் எழுந்தருளியுள்ள சாய்பாபா கோயிலில் புதன்கிழமை காலை மங்கள ஸ்நானம், ஆரத்தி, சா்வசித்தி சங்கல்ப பூஜை நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல பரமத்தி வேலூா் மகாமாரியம்மன், பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி,புதுமாரியம்மன், நன்செய் இடையாறு மகாமாரியம்மன், திருவேலீஸ்வரா், பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், புதிய காசி விஸ்வநாதா், பச்சமலை முருகன் கோயில், கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி பழனி ஆண்டவா் கோயில், அனிச்சம்பாளையம் சுப்பிரமணியா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT