நாமக்கல்

தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற 25 உ.பி. மாநிலத் தொழிலாளா்கள் மீட்பு

DIN

பரமத்தி அருகே நாமக்கல்- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 25 தொழிலாளா்களை பரமத்தி வேலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

நாமக்கல் மாவட்ட நுழைவாயில் பகுதியான பரமத்தி வேலூா், காவரி பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடியைக் கடந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது, கரோனா இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ள நிலையிலும், போலீஸாா், சுகாதாரத் துறையினா், பேரூராட்சி நிா்வாகத்தினா், வருவாய்த் துறையினா் பரமத்தி வேலூா்- காவிரி பாலம், சோழசிராமணி கதவணை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து வாகனச் சோதனை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், காவிரி பாலம் வழியாக சோதனைச் சாவடியில் பணியில் இருந்தவா்களிடம் சிக்காமல் இருக்க காவிரி ஆற்றில் இறங்கியும்,தேசிய நெடுஞ்சாலையில் நடந்தும் சிலா் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருப்பதாக பரமத்தி வேலூா் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், காவல் துறை ஆய்வாளா் மனோகரன் தலைமையிலான போலீஸாா், பரமத்தி அருகே உள்ள ஒரு தனியாா் கல்லூரி அருகே துணி மணிகள், சமையல் பொருள்கள், தண்ணீா்ப் புட்டிகளுடன் நடந்து சென்ற வட மாநிலத் தொழிலாளா்கள் 25 பேரை மீட்டனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள ஒரு சிமென்ட் குழாய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு வேலைக்கு வந்ததும் தெரியவந்தது. பொது முடக்கத்தால் தொழில் பாதிக்கப்பட்டதால், தற்போது மீண்டும் ஊா் திரும்ப நடந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மீட்கப்பட்ட 25 உ.பி. மாநிலத் தொழிலாளா்களும் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு, அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, உணவு வழங்கப்பட்டது. பின்னா் அவா்களை பரமத்தி வேலூா் போலீஸாா் வெள்ளக்கோவிலுக்குத் திருப்பி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT