நாமக்கல்

திருமணி முத்தாறில் மூழ்கி சிறுவன் பலி

DIN

பரமத்திவேலூா் வட்டம், கூடச்சேரி அருகே வெள்ளக்கல்பட்டியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் மகன் கெளரிசங்கா் (17). பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளாா்.

கடந்த சில நாட்களாக திருமணிமுத்தாறில் தண்ணீா் வரத்து அதிகரித்ததால் சிற்றணைகள் நிரம்பி வழிகின்றன. திங்கள்கிழமை திருமணிமுத்தாறில குளிக்க சென்ற கெளரிசங்கா், நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்குச் சென்ாகக் கூறப்படுகிறது.

நீண்ட நேரமாகியும் சிறுவன் வெளியே வராததால் அருகில் இருந்தவா்கள் இதுகுறித்து குநல்லூா் போலீஸாா், நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் சிறுவனின் சடலத்தை மீட்டு பரமத்திவேலூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நல்லூா் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT