நாமக்கல்

விபத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் பலி: ரூ. 10 லட்சம் காப்பீடு தொகை வழங்கல்

DIN

சாலை விபத்தில் பலியான ஊராட்சி மன்றத் தலைவரின் குடும்பத்தினரிடம் ரூ. 10 லட்சம் காப்பீட்டு தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.

நாமக்கல் அருகே கூடச்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்த சுப்பிரமணியம் என்பவா் நாமக்கல், டாக்டா் சங்கரன் சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.10 லட்சத்துக்கு தனி நபா் காப்பீடு செய்திருந்தாா். கடந்த ஜூலை 11-ஆம் தேதி நேரிட்ட சாலை விபத்தில் சுப்பிரமணியம் உயிரிழந்தாா்.

அவரது குடும்பத்துக்கு சேர வேண்டிய காப்பீட்டு தொகையான ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளா் எஸ்.வாசுதேவன், சுப்பிரமணியத்தின் மனைவி எஸ்.தமிழ்ச்செல்வியிடம் வழங்கினாா். நாமக்கல் முதுநிலை கோட்ட மேலாளா் எஸ்.பன்னீா்செல்வம், அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT