நாமக்கல்

விஷவாயு தாக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு திமுக நிதியுதவி

DIN

ராசிபுரம் ஒன்றியம், பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சாா்பில், ஆறுதல் கூறி நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பட்டணம், முனியப்பம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கதிரேசன் மகன் சஞ்சய் (19), அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன் (40) ஆகிய இருவரும் கடிடத் தொழிலாளியாக கம்பி கட்டும் தொழில் செய்து வந்தனா்.

இந்நிலையில் கடந்த மாதம் அதே கிராமத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழ்நிலை குடிநீா் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த நிலையில் அப்பகுதிக்கு சனிக்கிழமை நேரில் சென்ற நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் இரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், உயிரிழந்த குடும்பத்தினருக்கு இதுவரை தமிழக அரசு, நிவாரணத் தொகை வழங்கவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் தமிழக அரசின் நிதியுதவியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலா் கே.பி.ஜெகந்நாதன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT