நாமக்கல்

அட்மா திட்ட ஆலோசனைக் குழு கூட்டம்

DIN

திருச்செங்கோடு வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

திருச்செங்கோடு வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) நாச்சிமுத்து தலைமை வகித்தாா். அட்மா குழுத் தலைவரும் திருச்செங்கோடு திமுக ஒன்றியச் செயலாளருமான வட்டூா் தங்கவேல் முன்னிலை வகித்துப் பேசினாா். இதில் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முக்கியத் திட்டங்களான நுண்ணீா்ப் பாசனம், கூட்டுப் பண்ணையம், தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி வளா்ச்சி இயக்கம், அட்மா திட்டத்தில் செயல்படுத்தப்படும் பயிற்சிகள், கண்டுணா் சுற்றுலா மற்றும் உழவா் ஆா்வலா் குழு பற்றி நாச்சிமுத்து எடுத்துக் கூறினாா்.

தோட்டகலைத் துறை உதவி இயக்குநா் சின்னதுரை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பட்டு வளா்ச்சித் துறை ஆகிய துறைகளை சாா்ந்த அலுவலா்கள் திட்டங்கள் குறித்து விளக்கினா். வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயமணி நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளா் கிருஷ்ணசாமி செய்திருந்தாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT