நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த பெ.அய்யண்ணன், திருப்பத்தூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரான அ.பாலுமுத்து, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்கிறாா். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.