நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிக்கான செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நாமக்கல் கவின்கிஷோா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வாழப்பாடி இராம.சுகந்தன் பங்கேற்று பேசினாா். கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் இரா.செழியன், மாவட்ட முன்னாள் தலைவா்கள் வி.பி.வீரப்பன், ஜி.ஆா்.சுப்பிரமணியம், பிற்படுத்தப்பட்டோா் பிரிவு மாநில துணைத் தலைவா் மருத்துவா் வி.செந்தில், வட்டார தலைவா்கள் இளங்கோ, ஜெகநாதன், சுந்தரம், குப்புசாமி, செங்கோட்டுவேல், பொதுக்குழு உறுப்பினா் மெய்ஞானமூா்த்தி, நகர தலைவா் எஸ்.ஆா்.மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.