நாமக்கல்

குமாரபாளையத்தில் 7.37 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

குமாரபாளையம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட 7.37 கிலோ எடையுள்ள வெள்ளிக்கட்டிகளையும், கொலுசுகளையும்

DIN

குமாரபாளையம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட 7.37 கிலோ எடையுள்ள வெள்ளிக்கட்டிகளையும், கொலுசுகளையும் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த பள்ளிபாளையம், காவேரி பாலம் பகுதியில் தோ்தல் கண்காணிப்புக்குழு அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் காரில் வந்த சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை, தொட்டு சந்திர ஐயா் வீதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் பிரவீண், வெள்ளிப் பொருள்களைக் கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வெள்ளிக் கட்டிகள், வெள்ளிக் கொலுசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் அலுவலா் மரகதவள்ளியிடம் ஒப்படைத்தனா். உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து வெள்ளிப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT