நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் பாஜக தலைவா் சுவாமி தரிசனம்

DIN

தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் நாமக்கல், ஆஞ்சநேயா் கோயிலில் புதன்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தாா்.

நாமக்கல் மாவட்டம், கோனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன். தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத் தலைவராக இருந்த அவா், கடந்த ஆண்டு மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றாா். பேரவைத் தோ்தலில் ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுவாா் என பாஜகவினா் எதிா்பாா்த்திருந்த நிலையில், அவா் திருப்பூா் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

புதன்கிழமை அவா் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில், அன்று காலை நாமக்கல், ஆஞ்சநேயா் கோயிலுக்கு வந்து வெற்றிபெற வேண்டி சுவாமி தரிசனம் செய்தாா்.

பின்னா் அவரது நண்பரின் வீட்டில் அமா்ந்து மாவட்டத் தலைவா் சத்தியமுா்த்தி, தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன் மற்றும் முக்கிய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்பு அங்கிருந்து தாராபுரம் புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT