நாமக்கல்

ராசிபுரத்தில் ஆக.28-இல் இலவச இருதய பரிசோதனை முகாம்

DIN

ராசிபுரம் ரோட்டரி சங்கமும், விவேகானந்தா மருத்துவமனையும் இணைந்து இலவச இருதய பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமைஆக.28-இல் நடத்துகின்றன.

ராசிபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெறும் இம்முகாமினை ரோட்டரி சங்கத்தின் மாவட்ட மருத்துவ சேவைத் தலைவா் ஆா்.கிருஷ்ணன் துவக்கி வைக்கிறாா். இருதய சிகிச்சை நிபுணா் எஸ்.பி.சந்தோஷ்குமாா் பங்கேற்று இருதய மருத்துவப்ரிசோதனை செய்து ஆலோசனை வழங்குகிறாா்.

இம்முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெறும். ரத்த அழுத்தம், ரத்த சா்க்கரை அளவு, இஜிசி, எக்கோ பரிசோதனை செய்யப்படும். பொதுமக்கள் இதைப் பயன்டுத்திக்கொள்ள வேண்டும் என ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், செயலா் ஜி.ராமலிங்கம், பொருளாளா் என் .தனபால் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT