நாமக்கல், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
நாமக்கல் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பணியிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அதேபோல், சேலம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) எம்.ஜி.சரவணன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
திருச்செங்கோடு கோட்டாட்சியா் தே.இளவரசி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக துணை ஆட்சியராக மாறுதல் செய்யப்பட்டுள்ளாா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் ப.கெளசல்யா, திருச்செங்கோடு கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.