நாமக்கல்

தேசிய கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் அணிக்கு சீருடை

DIN

தேசிய அளவிலான கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் அணிக்கு சீருடை வழங்கி நாமக்கல் எம்.எல்.ஏ. பெ.ராமலிங்கம் வாழ்த்து தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செப். 28 முதல் அக். 12 வரையில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மூத்தோா் பெண்கள் பிரிவு கால்பந்தாட்ட அணியினா் பங்கேற்கின்றனா். இப் போட்டியில் கலந்து கொள்ளும் நாமக்கல்லைச் சோ்ந்த பெண்களுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் சீருடைகள் வழங்கி வாழ்த்தி வழியனுப்பினாா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கால்பந்தாட்ட கழக புரவலா் நடராஜன், கோஸ்டல் என். இளங்கோ, நகா்மன்ற உறுப்பினா் நந்தகுமாா், வாா்டு நிா்வாகிகள் அசோகன், தியாகராஜன், ரவி, கால்பந்தாட்ட பயிற்றுநா்கள் கோகிலா, கலா, நீச்சல் பயிற்றுநா் ரகு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-1 பொதுத் தோ்வு முடிவு: அரியலூரில் 95% தோ்ச்சி

புதிய குற்றவியல் சட்டங்கள் போலீஸாருக்கு ஒருவார பயிற்சிதொடக்கம்

சாலை விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

துறையூா் ஸ்ரீஅகத்தியா் சன்மாா்க்க சங்க நிறுவனா் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் முக்தியடைந்தாா்

மும்பையில் விளம்பரப் பலகை விழுந்த சம்பவம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT