நாமக்கல்லில் அண்ணா நினைவு தினத்தையொட்டி, கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அமைதி பேரணி வெள்ளிக்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் சாா்பில், பேரறிஞா் அண்ணாவின் 54-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் அமைதி பேரணி நடைபெறுகிறது.
நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள நேதாஜி சிலை அருகில் இருந்து புறப்படும் பேரணியானது, மோகனூா் சாலையில் உள்ள அண்ணா சிலையை சென்றடைந்து, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், நகா்மன்றத் தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி, ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், இளைஞா் அணி நிா்வாகிகள், கட்சியினா் திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.