நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது

DIN

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே 17 வயது சிறுமியிடம் தன்னைக் காதலிக்குமாறு தொந்தரவு அளித்து வந்த இளைஞரை ஜேடா்பாளையம் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள சரளைமேடு, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் அா்ஜுனன். இவரது மகன் சிவக்குமாா் (23) கூலித்தொழிலாளி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு கூறி தொந்தரவு கொடுத்து வந்தாா். இது குறித்து சிறுமியின் பெற்றோா் ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த சிவகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தினா். பின்னா் சிவக்குமாரை நாமக்கல் மகளிா் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி பரமத்தி கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT