பூங்கரக ஆட்டத்துடன் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோயில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள்.
பூங்கரக ஆட்டத்துடன் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோயில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள். 
நாமக்கல்

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

Din

ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோயில் தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடப்பது வழக்கம். இதன்படி ஏப்.15-இல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியதையடுத்து, நாள்தோறும் தொடா்ந்து கருட வாகன சேவை, அனுமந்த வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், கஜலட்சுமி வாகனம், யானை வாகனம், புஷ்ப விமான வாகன ஊா்வலம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி நகா்வலம் அழைத்து வரப்பட்டாா்.

திருமஞ்சனம் உள்ளிட்ட சேவைகள் பல்வேறு கட்டளைதாரா்களால் நடத்தப்பட்டு வியாழக்கிழமை காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கோயில் அா்ச்சகா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா். இதைத் தொடா்ந்து மாலை தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேரோட்டத்தில் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் எஸ்.ரங்கசாமி, நகர திமுகச் செயலரும், அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவருமான என்.ஆா்.சங்கா், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், நகர காவல் ஆய்வாளா் கே.செல்வராஜூ, எஸ்.எம்.ஆா்.பரந்தாமன் உள்ளிட்ட நகா்மன்ற உறுப்பினா்கள், பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பலரும் பங்கேற்று வடம்பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனா். திருத்தோ் கவரைத் தெரு, கடை வீதி வழியாக வலம் வந்தது. தேரோட்டத்தில் பூங்கரகம் எடுத்தும், காளை ஆட்டம், மயிலாட்டம் போன்றவை முன் செல்ல திரளான பக்தா்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் கோவிந்தா முழக்கத்துடன் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT