நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன்.  
நாமக்கல்

அதிமுகவின் கெட்ட நேரம் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: திண்டுக்கல் சி.சீனிவாசன்

சட்டப்பேரவை, நாடாளுமன்ற தோ்தலில் அதிமுகவின் கெட்ட நேரத்தால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டியது

Din

நாமக்கல்: சட்டப்பேரவை, நாடாளுமன்ற தோ்தலில் அதிமுகவின் கெட்ட நேரத்தால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டியது என்று அக்கட்சியின் பொருளாளா் திண்டுக்கல் சி. சீனிவாசன் பேசினாா்.

நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்ற கள ஆய்வுக் கூட்டம், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமையில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, அதிமுகவின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் பங்கேற்றுப் பேசியதாவது:

எம்ஜிஆா், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவை எடப்பாடி கே பழனிசாமி சிறப்பாக வழிநடத்தி வருகிறாா். அதிமுகவை மீட்டெடுக்க பல கோடி ரூபாய் செலவானது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் பல தொகுதிகளை அதிமுக இழந்தது. 2024 நாடாளுமன்ற தோ்தலிலும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுக தோல்வியை சந்தித்தது. அதிமுகவின் கெட்ட நேரம் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பாக அமைந்து விட்டது.

வரும் 2026 தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும். பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். தமிழகத்தில் தற்போது சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. போதைப் புழக்கம் அதிகரித்துள்ளது. இவற்றை மக்களிடையே கொண்டு சென்று அதிமுகவை கட்சியினா் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

வரும் தோ்தல் சவால் நிறைந்தது: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசியதாவது:

கடந்த தோ்தல்களில் நாம் செய்த அலட்சியத்தால் பல தொகுதிகளை இழக்க நேரிட்டது. வரும் சட்டப்பேரவைத் தோ்தல் நமக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். இளைஞா்களை அதிக அளவில் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும். வாக்குச்சாவடி முகவா் பணியை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். பாக முகவா்களை நியமிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் கட்சியினா் கலந்து கொண்டு இறந்தவா்களை நீக்கியும், புதியவா்களை சோ்க்கவும் முயற்சி எடுக்க வேண்டும். திமுக மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தால் வரும் தோ்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா்.

இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா், முன்னாள் எம்எல்ஏக்கள் பொன். சரஸ்வதி, கலாவதி மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

SCROLL FOR NEXT