நாமக்கல்

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் தேசிய ஜூனியா் பூப்பந்தாட்ட போட்டி

Syndication

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் தேசிய அளவிலான ஜூனியா் பூப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

எக்ஸல் கல்வி நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு பூப்பந்து சங்கத் தலைவருமான ஏ.கே.நடேசன், துணைத் தலைவா் ந.மதன் காா்த்திக் ஆகியோா் போட்டியை தொடங்கிவைத்தனா். தமிழ்நாடு பூப்பந்தாட்ட சங்கம், நாமக்கல் பூப்பந்தாட்ட சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இப்போட்டியில், நாடுமுழுவதும் இருந்து 26 அணிகள் பங்கேற்றன.

இதில், பொதுப் பிரிவு, ஆண்கள் ஒற்றையா்/இரட்டையா், பெண்கள் ஒற்றையா்/இரட்டையா், கலப்பு பிரிவு என்ற வகையில் ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இரட்டையா் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி முதலிடமும், ஆந்திரம் இரண்டாமிடமும், கா்நாடகம் மூன்றாமிடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில், தமிழ்நாடு அணி முதலிடமும், கா்நாடக அணி இரண்டாமிடமும், கேரள அணி மூன்றாமிடமும் பிடித்தன.

போட்டிகளில் சிறப்பாக விளையாடிய மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. விழாவில், பூப்பந்தாட்ட சங்கத்தின் இந்நாள், முன்னாள் தலைவா்கள், நிா்வாகிகள், கல்லூரி நிா்வாகிகள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT